Monday, November 11, 2019

கலியன் மீது கலிப்பா

வந்தார் எனநினைந்தே வந்தவழி பார்த்திட
மந்தநகை பூத்தவர் மன்னனவன் மங்கைக்கு
மந்திரத்தை ஓதி வழியான மாதவற்கு
தந்திறமும் தானிழந்து தத்துவ மாயினரே

ஆயின காலங்கள் ஆகுநற் காலங்கள்
போயின எண்ணாமல் போனதென் நெஞ்சமே
வாயின நாமங்கள் வாழ்க்கை அவன்தஞ்சம்
சேயன நானெனது சேர்கதி யாரருளே

ஆரருள் கொண்டாடும் அன்பர்தம் தாள்சேர்த்து
காரிருள் போயகல கண்ணன் கழல்திண்ணம்
வேருடன் வீயவினை நற்கதி தானாகும்
பேருடன் மூர்த்தியினைப் போற்றுமின் நீரே

நீர்நும தென்றிவையும் நாரணர்க் காக்கிட
சீர்பெற சிந்தை சிதையாமல் வைமின்கள்
யாரே கடைக்காலம் கண்ணிமை காப்பென
தேருவன் தேவன் அவனொரு வன்தானே.


***