கலியன் மீது கலிப்பா
வந்தார் எனநினைந்தே வந்தவழி பார்த்திட
மந்தநகை பூத்தவர் மன்னனவன் மங்கைக்கு
மந்திரத்தை ஓதி வழியான மாதவற்கு
தந்திறமும் தானிழந்து தத்துவ மாயினரே
ஆயின காலங்கள் ஆகுநற் காலங்கள்
போயின எண்ணாமல் போனதென் நெஞ்சமே
வாயின நாமங்கள் வாழ்க்கை அவன்தஞ்சம்
சேயன நானெனது சேர்கதி யாரருளே
ஆரருள் கொண்டாடும் அன்பர்தம் தாள்சேர்த்து
காரிருள் போயகல கண்ணன் கழல்திண்ணம்
வேருடன் வீயவினை நற்கதி தானாகும்
பேருடன் மூர்த்தியினைப் போற்றுமின் நீரே
நீர்நும தென்றிவையும் நாரணர்க் காக்கிட
சீர்பெற சிந்தை சிதையாமல் வைமின்கள்
யாரே கடைக்காலம் கண்ணிமை காப்பென
தேருவன் தேவன் அவனொரு வன்தானே.
***
<< Home